ரெளடி மனைவியிடம் ரவுசு-வாலிபர் கொலை
சென்னை:சென்னையில் ரெளடியின் மனைவியை ஜாலியாக இருக்க அழைத்த புது மாப்பிள்ளைஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டார்.
துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் சர்க்கரை. ரெளடியான இவர் மீதுஏகப்பட்ட வழக்குகள் உள்ளன.
சமீபத்தில் இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது சர்க்கரையின்மனைவி வசந்தி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியைச்சேர்ந்த அசோக் என்பவர் வசந்தியை கிண்டலடித்து ஜாலியாக இருக்கலாமா என்றுகூப்பிட்டுள்ளார்.
இந் நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சர்க்கரை விடுதலையாகி வெளியே வந்தார்.அவரிடம், அசோக் தன்னை ஜாலியாக இருக்கக் கூப்பிட்டதாக வசந்தி கூறியுள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சர்க்கரை, அதே வேகத்தில் அசோக்கை தேடிச்சென்றார். டீக் கடையில் அமர்ந்திருந்த அசோக்கை சர்க்கரை சரமாரியாக தாக்கினார்.
இதையடுத்து வீடு திரும்பிய சர்க்கரைக்கு ஆத்திரம் அடங்கவில்லை. வீட்டில் இருந்தஅரிவாளை எடுத்துக் கொண்டு அசோக்கின் வீட்டுக்கு ஓடினார். அரிவாளுடன்ஆவேசமாக வந்த சர்க்கரையைப் பார்த்த அசோக் வீட்டிலிருந்து தப்பியோடினார்.ஆனால் சர்க்கரை அவரை விரட்டிச் சென்றார்.
ஓட ஓட விரட்டி அசோக்கை சரமாரியாக வெட்டித் தள்ளினார். பலத்த காயமடைந்தஅசோக் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அசோக் இறந்து விட்டார்.
6 மாதத்திற்கு முன்புதான் அசோக்குக்குத் திருமணம் நடந்தது.
சர்க்கரை மற்றும் வசந்தி இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப்போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications