11 பேர் கொலையிலும் சிபுசோரனுக்கு தொடர்பு
ஜமதாரா (ஜார்க்கண்ட்):தனது உதவியாளரைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜார்கண்ட் முக்திமோர்ச்சா தலைவர் சிபுசோரன் இன்னொரு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
உதவியாளர் சசிநாத் ஜா கொலை வழக்கில் சிக்கிய சிபுசோரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனைவிதித்தது. இதையடுத்து டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 1975ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ஜமதாரா என்ற இடத்தில், சிர்ருத்என்ற இடத்தில் காவல் நிலையம் மீது ஒரு கும்பல் வன்முறை தாக்குதலை மேற்கொண்டது. இதில் 11 பேர்கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் மற்றும் கொலை வழக்கில் மொத்தம் 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் சோரனும்ஒருவர். இந்த கொலை வழக்கு ஜமதாரா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து சிபு சோரன் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அருண்குமார் முன்ஆஜர்படுத்தப்பட்ட சோரனை, மறு உத்தரவு வரும் வரை ஜமதாராவில் உள்ள சிறையில் அடைக்க நீதிபதிஉத்தரவிட்டார்.
ஆனால் ஜமதாராவில் மத்திய சிறை இல்லை என்பதால் சோரனுை தும்கா மத்திய சிறைக்கு கொண்டு போய்போலீஸார் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை சோரன் இங்குதான் அடைக்கப்பட்டிருப்பார்.












Click it and Unblock the Notifications