உதவி போலீஸ் கமிஷ்னர் வீட்டில் புகுந்த திருடன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையில் உதவி காவல் ஆணையர் வீட்டிற்குள்ளேயே புகுந்துஅங்கிருந்தவர்களைத் தாக்கி துணிகர திருட்டில் ஈடுபட முயன்றவனை அப்பகுதியைச்சேர்ந்தவர்கள் வளைத்துப் பிடித்து சரமாரியாக அடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற காவல் உதவி ஆணையராக இருப்பவர் அசோக். இவரது வீடுமைலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் தெருவில் உள்ளது.

அசோக்குடன் அவரது வயது முதிர்ந்த பெற்றோரும் உடன் வசித்து வருகின்றனர்.நேற்று மாலை 6 மணியளவில் அசோக் வீட்டு வேலைக்காரப் பெண் பால் வாங்கிக்கொண்டு வீட்டின் பின் பக்கமாக உள்ளே வந்துள்ளார்.

அப்போது அவரைப் பின் தொடர்ந்து வந்த ஒரு நபர், வேலைக்காரப் பெண்ணைஉள்ளே தள்ளி விட்டு அவனும் நுழைந்தான். பின்னர் வீட்டுக் கதவைப் பூட்டினான்.

சத்தம் கேட்டு அங்கு வந்த அசோக்கின் தாயாரையும், வேலைக்காரப் பெண்ணையும்தாக்கி கீழே தள்ளிய அந்த நபர், வீட்டில் இருந்த இரண்டு சூட்கேஸ்களை எடுத்துக்கொண்ட ஓட முயன்றான்.

அப்போது வீட்டில் இருந்த அசோக்கின் தந்தை சுதாரித்துக் கொண்டு திருடனின்முகத்தில் குத்தினார். இதில் நிலை குலைந்த திருடன் கீழே விழுந்தான். அசோக்கின்தாயார் அதற்குள் முன்பக்கமாக வெளியே ஓடி திருடன் திருடன் என குரல்கொடுத்ததால் அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள், கடைக்காரர்கள்,பொதுமக்கள் என பலரும் திரண்டனர்.

அத்தனை பேரும் சேர்ந்து வீட்டை முற்றுகையிட்டதால் திருடனால் தப்பமுடியவில்லை. வசமாக சிக்கிய திருடனை அனைவரும் சரமாரியாக அடித்துநையப்புடைத்தனர். அதற்குள் அசோக்கும் தகவல் அறிந்து விரைந்து வந்தார்.

பின்னர் திருடனை மைலாப்பூர் போலீஸார் வந்து பிடித்துச் சென்றனர். அந்த நபரின்பெயர் சண்முகம் என்பது தெரிய வந்துள்ளது.

சென்னை மாநகர காவல்துறை 150வது ஆண்டு விழாவை கொண்டாடி வரும்நிலையில், உதவி ஆணையரின் வீட்டிலேயே துணிகரமாக திருடன் புகுந்த சம்பவம்சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+