திருட்டு: ஏற்காடு ரயிலில் போலீஸ் ஸ்டேஷன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவங்கள் நடப்பதால் திருடர்களைப் பிடிக்கரயிலிலேயே நடமாடும் காவல் நிலையம் அமைக்க ரயில்வே போலீஸ் முடிவு செய்துள்ளது.

சேலம் காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் நாம். இவர் நகைக் கடை நடத்தி வருகிறார். தனதுஉதவியாளர் ஸ்ரீதருடன் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இவர் நேற்று சென்னைக்கு வந்தார்.

அப்போது ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் வைத்திருந்த சூட்கேஸை சிலர் திருடிச் சென்றனர்.இதுகுறித்து ரயில்வே போலீஸில் பிரேம் புகார் கொடுத்தார்.

இதேபோல கடந்த நவம்பர் 8ம் தேதி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இந்த ரயிலில் பயணம் செய்தபோதுஅவரது உதவியாளர் வைத்திருந்த ரூ. 21,500 பணம் இருந்த பெட்டி திருட்டுப் போனது. அமைச்சரின்சூட்கேஸும் கூட அப்போது திருடப்பட்டது.

டிசம்பர் 4ம் தேதி சேலத்தைச் சேர்ந்த தர்மராஜன் என்பவரின் சூட்கேஸும் திருட்டுப் போனது. தொடர்ந்து இந்தரயிலில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பது தொடர்பாக ரயில்வே ஐஜி ராஜா, எஸ்.பி. ஆனி விஜயா ஆகியோர்இன்று அவசர ஆலோசனை நடத்தினர்.

திருட்டைத் தடுக்கவும், திருடர்களைப் பிடிக்கவும் ரயிலிலேயே ஒரு சப் இன்ஸ்பெக்டர், 4 போலீஸார் அடங்கியநடமாடும் காவல் நிலையத்தை அமைக்க அப்போது முடிவு செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+