ஈரானில் அணுகுண்டு வீச இஸ்ரேல் திட்டம்?
லண்டன்:ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் நிலைகளை அணு ஆயுதங்களை கொண்டு தாக்கிஅழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக லண்டனின் சண்டே டைம்ஸ் இதழ் செய்திவெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவ தகவல்களை மேற்கோள் காட்டி சண்டே டைமஸ் வெளியிட்டுள்ளசெய்தி:
ஈரானின் நடான்ஸ் என்ற இடத்தில் உள்ள அணு ஆயுத நிலையை தாக்கி அழிக்கஇரண்டு விமானப்படை பிரிவுகளுக்கு இஸ்ரேல் தீவிர பயிற்சி அளித்து வருகிறது.
இந்த இடம் தவிர அரக் என்ற இடத்தில் உள்ள கன நீர் தயாரிப்புப் பிரிவு, இஸ்பகான்என்ற இடத்தில் உள்ள யுரேனியம் மாற்று உலை ஆகியவற்றையும் தாக்கி அழிக்கஇஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. சாதாரண வகை அணு குண்டுகளை வீசி இவற்றை தாக்கஇஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவிக்கிறது.
யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை ஈரான் நிறுத்த மறுத்ததால், கடந்த மாதம்தான்ஈரான் மீது ஐ.நா. பாதுகாப்பு சபை தடையை அறிவித்தது என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் ஈரானைத் தாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக செய்திவெளியாகியுள்ளது. கடந்த 1981ம் ஆண்டு ஈராக்கில் உள்ள அணு உலையைஇஸ்ரேல் படைகள் தாக்கி அழித்தன. அதேபோல இப்போது ஈரான் மீது தாக்குதல்நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் இஸ்ரேல் நினைப்பது போல ஈரானின் பலம், வலு குறைந்த ஒன்றல்ல,ஈராக்கைப் போல ஈரானை அவ்வளவு எளிதில் தாக்க முடியாது என்று நிபுணர்கள்கூறுகின்றனர்.
சண்டே டைம்ஸ் செய்தி குறித்து இஸ்ரேல் அரசு செய்தித் தொடர்பாளர் மிரி எய்ஸின்கூறுகையில், இதுபோன்ற செய்திகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் தர விரும்பவில்லைஎன்றார்.
ஆனால், இஸ்ரேல் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் உலகம் முழுமைக்கும் உரியபாடத்தை ஈரான் கற்பிக்கும் என ஈரான் வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் முகம்மதுஅலி ஹூசைனி எச்சரித்துள்ளார்.
அவர் இதுகுறித்துக் கூறுகையில், உலக அமைதிக்கும், இப்பிராந்தியத்திற்கும் மிகப்பெரிய மிரட்டல், எதிரி இஸ்ரேல்தான் என்பதை நாங்கள் உலகுக்கு நிரூபிப்போம்.
ஈரான் மீதான எந்தத் தாக்குதலையும், ஊடுறுவலையும் சமாளிக்க ஈரான் தயாராகஉள்ளது. அப்படிப்பட்ட செயலை செய்பவர்கள் அதற்காக பெரிய விலையைகொடுக்க வேண்டியிருக்கும் என்றார்.
ஏற்கனவே இஸ்ரேல் என்ற நாடே உலக வரைபடத்தில் இல்லாமல் செய்வோம் எனஈரான் அதிபர் மகமூத் அகமதியாஜேத் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications