பொறுப்புணர்வுடன் நடக்க ஜெ. அட்வைஸ்
சென்னை:தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் கவலை தரும் வகையில் உள்ளதாக அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழக காவல்துறையின் செயல்பாடு மிகவும் கவலை தருவதாக உள்ளது. தங்களதுபொறுப்பை உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும்.
புரசைவாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு சமீபத்தில் ஐ.சி.எப். காவல்நிலையத்திற்கு அவரது ஆதரவாளர்களுடன் சென்று போலீஸார் லாக்கப்பில் அடைத்துவைத்திருந்த ரவுடியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ள சம்பவம்நடந்துள்ளது.
காவல்துறை நிர்வாகத்தில் ஆளுங்கட்சியின>ன் தலையீடு அதிக அளவில் உள்ளதுஎன்பதை நிரூபிப்பதாக இது உள்ளது.
பாபுவுக்கு எதிராக காவல்துறையை தனது பொறுப்பில் வைத்துள்ள முதல்வர்கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னை மாநகரில் நடந்த வன்முறைச் சம்பவங்கள்காவல்துறையின் மோசமான நிலைக்கு இன்னொரு சான்றாக உள்ளது. திமுகவின்தலையீடு மற்றும் குண்டர்களின் வெறியாட்டத்தை மக்கள் கண்கூடாக பார்த்தனர்.
அதிமுகவினர் மீது கருணாநிதி பாரபட்சமான போக்குடன் நடந்து கொள்வதையே இதுகாட்டுகிறது. உள்ளாட்சித் தேர்தலின்போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதுஇதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திட்டமிட்டவன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. இந்த ஆட்சியின் நாட்கள்எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications