நெல்லை: நடுரோட்டில் 2 பேர் வெட்டிக் கொலை
திருநெல்வேலி:திருநெல்வேலியில் பட்டப்பகலில் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி பாளையங்கேட்டை கீழப்பாட்டம் கிரமத்தை சேர்ந்த மாணிக்கம் (28) மற்றும் அந்தோணி ராஜ்(30). இருவரும் நேற்று திருநெல்வேலி பைபாஸ் ரோட்டில் மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது அவர்களை மர்ம கும்பல் ஒன்று காரில் பின்தொடர்ந்து வந்தது.
இந்நிலையில் தாமிரபரணி ஆற்றுப் பாலம் அருகே இருவரும் சென்று கொண்டிருந்த போது அந்த கார் பைக்கிள்மோதியது. இதில் அவர்கள் நிலை தடுமாறி கிழே விழுந்தனர். இதையடுத்து காரில் வந்த கும்பல் இருவரையும்சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.
இதில் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டது. தப்பி ஓட முயன்ற மற்றொரு ஒருவரையும் அக்கும்பல் துரத்தி சென்றுசரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்த இருவரின் மீதும் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 5 பேரைகைது செய்துள்ளனர்.
பட்டப்பகலில் 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications