பெரியார் சிலைக்குத் தூக்கு: இ.ம.க பிரமுகர் கைது
கோவை:கோவை அருகே பெரியார் சிலையின் கழுத்தில் கயிற்றைக் கட்டி தூக்குப் போடுவது போல செய்துஅவமரியாதை செய்ததாக இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் திருமுருகன் என்பவரைபோலீஸார் கைது செய்தனர்.
சமீபத்தில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்தசர்ச்சை சமீபத்தில்தான் ஓய்ந்தது. இந்த நிலையில் கோவையில் மறுபடியும் பெரியார் சிலைக்கு அவமதிப்புநடந்துள்ளது.
கோவை புளியகுளம் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அருகே பெரியாரின் சிலை உள்ளது. இந்த சிலைக்குஅருகே திமுக கொடிக்கம்பம் உள்ள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் சிலர் திமுக கொடியை தீவைத்துஎரித்துள்ளனர்.
பின்னர் சிலையின் கழுத்தில் கயிற்றைக் கட்டி தூக்கில் போடுவது போல கயிற்றைக் கட்டியிருந்தனர். இதனால்அங்கு பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.
இதுகுறித்துத் தகவல் அறிந்தவுடன் புளியகுளம் போலீஸார் விரைந்து வந்தனர். பெரியார் சிலையின் கழுத்தில்கட்டப்பட்டிருந்த கயிற்றை அகற்றினர். அங்கு பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர்.
பெரியார் சிலையை இப்படி விஷமத்தனமாக அவமரியாதை செய்த நபர்களை தேடி வந்தனர். இதில், இந்துமக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் திருமுருகன் என்பவர் சிக்கினார். இவரது வீடு சிலைக்கு வெகுஅருகில்தான் உள்ளது.
அவரைப் போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டப்படிநடவடிக்கை எடுக்க போலீஸார் திட்டமிட்டள்ளனர்.
பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாமல் தடுக்க போலீஸார்உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications