71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழகத்தில் இன்று 5 வயதுக்குட்பட்ட 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துவழங்கப்படுகிறது.
தமிழகத்தில் இன்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்புமுகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 71 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்துவழங்கப்படுகிறது.
சென்னையில் முதல்வர் கருணாநிதி சொட்டு மருந்து வழங்குவதைத் தொடங்கி வைத்தார். மாவட்டத்தலைநகரங்களில் அமைச்சர்கள் சொட்டு மருந்து முகாமைத் தொடங்கி வைத்தனர்.
இதையொட்டி மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள்,பேருந்து நிலையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications