அரசுக் குடியிருப்பில் நாய் வளர்க்கத் தடை!
சென்னை:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் குடியிருப்போர் நாய் போன்ற செல்லப் பிராணிகளை வளர்க்கஅரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலர்களுக்கான வாடகைக் குடியிருப்பு மற்றும் பொது வாடகைக்குடியிருப்புகளில் வசித்து வரும் ஒதுக்கீடுதாரர்கள் அக்குடியிருப்புகளை உள் வாடைக்கு விடுவதாகவும், நாய்,பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்த்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக அண்டை அயலார் வீடுகளில் வசிப்போருக்கு இடையூறு ஏற்படுவதாகவும், புகார்கள்வருகின்றன. இது வாரிய வாடகை ஒதுக்கீடு விதமுறைகளுக்கு புறம்பானது.
எனவே ஒதுக்கீடுதாரர்கள் கீழ்க்கண்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்பினை யாருக்கும் உள் வாடகைக்கு விடக் கூடாது. 60 நாட்களுக்கு மேல்வீடுகளைப் பூட்டி வைக்கக் கூடாது. அப்படி பூட்டி வைக்க நேரிட்டால் வாரியத்துக்குத் தகவல் தெரிவிக்கவேண்டும்.
நாய், பூனை போன்றவற்றை வளர்க்கக் கூடாது. பணி ஓய்வு, மாறுதல், ஒதுக்கீடுதாரர் இறப்பு போன்றவற்றுக்குப்பிறகு அனுமதியின்றி விதிமுறைகளை மீறி தொடர்ந்து குடியிருக்கக் கூடாது.
இந்த விதிமுறைகளை மீறி செயல்படுவோரின் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். அவர்கள் மீது துறை சார்ந்த மற்றும்குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications