உறைகிறது தால் - பனியில் நடுங்கும் வட இந்தியா

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:உலகப் புகழ் பெற்ற தால் ஏரி கடும் பனிப் பொழிவு காரணமாக உறையத் தொடங்கியுள்ளது. பனிப்பொழிவுநாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வட இந்தியா முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் டெல்லி உள்படவட இந்தியா முழுமையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கடும் பனியிலும், குளிரிலும் நடுங்கிக் கொண்டுள்ளனர். டெல்லியில் விமானப் போக்குவரத்து கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது. எந்த விமானமும் சரியான நேரத்திற்குப் புறப்படுவதும் இல்லை, வந்து சேருவதும் இல்லை.

தொடர்ந்து நிலவி வரும் கடும் பனி மற்றும் குளிருக்கு பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற தால் ஏரியின் பல பகுதிகளில் பனிகாரணமாக உறையத் தொடங்கியுள்ளது.

காஷ்மீரில் இரவு நேர வெப்பநிலை தற்போது -5.9 டிகிரியாக உள்ளது. பகல் நேரங்களில் இதமான தட்பவெப்பம்நிலவினாலும், இரவில் கடும் பனி இருக்கிறது.

கடும் பனிப்பொழிவு காரணமாக தால் ஏரியின் பல பகுதிகள் உறையத் தொடங்கி விட்டன. தால் ஏரி கடந்த1960களில் முழுமையாக உறைந்து பனிக்கட்டி ஏரியாக மாறியது. அப்போது -12 டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை இருந்தது.

அந்த சமயத்தில் உறைந்த தால் ஏரியின் வழியாக வாகனங்கள் கூட சென்றதாம். அதன் பின்னர் 1986ம் ஆண்டுதால் ஏரி முழுமையாக உறைந்து போனது. உறைந்த ஏரியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.

அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் கடும் பனி நிலவினாலும் ஏரி உறைந்து போகவில்லை. இந்த நிலையில்இந்த ஆண்டு கடும் பனி நிலவுவதால் ஏரியின் பல பகுதிகள் உறை நிலைக்குப் போக ஆரம்பித்துள்ளன. ஏரிமுழுமையாக உறையுமா என்ற எதிர்பார்ப்பு காஷ்மீர் வாசிகளிடம் மட்டுமல்லாது சுற்றுலாப் பயணிகளிடமும்ஆவலை தூண்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+