இராக் அருகே இந்திய கப்பல் மூழ்கி 14 பேர் பலி
துபாய்:இந்தியாவைச் சேர்ந்த பயணிகள் சொகுசு கப்பல் இராக் அருகே கடலில் மூழ்கியது. இதில் 14 பேர்பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.
மும்பையைச் சேர்ந்த தாடியா என்ற தொழிலதிபருக்கு சொந்தமான எம்எஸ்வி ஸ்ரீகிருஷ்ண சாகர் என்ற சொகுசுக்கப்பல் கடந்த மாதம் 27ம் தேதி கடலில் மூழ்கியுள்ளது. இதையடுத்து அந்தப் பகுதியில் சென்ற நார்வே நாட்டுடேங்கர் கடலில் தத்தளித்த 2 பேரை மீட்டுள்ளது.
அந்த இருவரும் ஹெலிகாப்டர் மூலம் பஹ்ரைனுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மும்பைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
இராக்கின் பாஸ்ரா அலி எண்ணெய் கிணற்றுப் பகுதியில் இருந்து 50 கடல் மைல் தொலைவில் இந்திய கப்பல்மூழ்கியுள்ளது. இந்த தகவல்கள் மிகத் தாமதமாக இப்போது தான் வெளியுலகுக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது.
மீட்புப் பணியில் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஹாவர்ட் கடற்படைக் கப்பலும் ஈடுபட்டுள்ளது. ஆனால், கப்பல்மூழ்கி இத்தனை நாட்களாகிவிட்டதால் அதிலிருந்தவர்கள் இந்நேரம் பலியாகியிருக்கக் கூடும் என்றுகருதப்படுகிறது.
கப்பலில் 16 பேர் வரை இருந்துள்ளனர். இரண்டு பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.
துபாய் ஏர்போர்ட்டில் இந்திய முதியவர் மரணம்:
துபாய் விமான நிலையத்தில் இந்தியாவைச் சேர்ந்த 70 வயது முதியவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் முகம்மது குஞ்சு. 70 வயதாகும் முகம்மது, ஹஜ் யாத்திரை மேற்கொண்டிருந்தார்.ஹஜ் பயணத்தை முடித்து விட்டு திருவனந்தபுரம் திரும்புவதற்காக துபாய் விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலைய மருத்துவமனையில் அவர்சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் மரணமடைந்தார்.
துபாய் அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன், குஞ்சுவின் உடல் திருவனந்தபுரத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.












Click it and Unblock the Notifications