மகளிர் ஆணைய தலைவரான இந்திரகுமாரி
சென்னை:தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவராக முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் முதலாவது அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. அதிமுகமகளிர் அணித் தலைவியாகவும் இருந்து வந்தார்.
![]() |
கடந்த ஆட்சியில் அவர் ஓரம் கட்டப்பட்டார். வளர்மதி முன்னிலைப்படுத்தப்பட்டார். கடந்த சட்டசபைத்தேர்தலுக்கு முன்பாக கட்சியிலிருந்து விலகினார் இந்திர குமாரி. பின்னர் கருணாநிதியை சந்தித்து திமுகவில்இணைந்தார்.
தற்போது இந்திரகுமாரிக்கு தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முன்னாள் அமைச்சர் இந்திர குமாரியை தமிழ்நாடு மகளிர்ஆணையத் தலைவராகவும், உறுப்பினர்களாக எம்.எல்.ஏக்கள் கமலாம்பாள், காயத்ரி தேவி, குத்சியா காந்திஐஏஎஸ், வனிதா ஐபிஎஸ், ராணி மேரிக் கல்லூரி முதல்வர் குயீன் பின்டோ, வழக்கறிஞர் சங்கமித்ரா, ஆலிஸ்மனோகரி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அலுவல் சார்பான உறுப்பினர்களாக சமூக நலத்துறை செயலாளரும், உறுப்பினர் செயலாளராக சமூக நலத்துறைஇயக்குநரும் முதல்வர் கருணாநிதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications