காஞ்சிப் பெரியவர் சிலை சேதம்!!
சென்னை:பெரியவர் என அழைக்கப்படும் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சுவாமிகளின் சிலையைசென்னையில், விஷமிகள் சிலர் சேதப்படுத்தியதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மயிலாப்பூர் லேடி சிவசாமி சாலையில், சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாதுகா மண்டபத்தில் மறைந்தசங்கராச்சாரியாரின் சிலை உள்ளது. இதற்கு பக்தர்கள் தினசரி வழிபாட்டு நடத்தி வருகிறார்கள்.
சனிக்கிழமை அதிகாலை மண்டபத்திற்கு வந்த சில விஷமிகள் ஜன்னல் கண்ணாடிகளையும், சங்கராச்சாரியார்சிலையையும் சேதப்படுத்தினர். இதனால் பக்தர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது.
சமீபத்தில் அயோத்தியா மண்டபத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த நிலையில், சங்கராச்சாரியார் சிலைசேதப்படுத்தப்பட்டதால் புதிய பரபரப்பு எழுந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு துணை ஆணையர் மெளரியா நேரில் சென்று விசாரணை நடத்தினார். குற்றவாளிகளைப்பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications