நெய்வேலி திமுக பிரமுகர் வெட்டி கொலை
நெய்வேலி:நெய்வேலியில் 10 பேர் கொண்ட கும்பல் திமுக பிரமகரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.
நெய்வேலி அருகே உள்ள வடக்குமேலூர் பகுதியை சேர்ந்த ஜோதி ராஜேந்திரன்.திமுக பிரமுகராவார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் இவர் தனது ஆதரவாளர்ளுக்காகதீவிர பிரசாரம் செய்தார். இதனால் ராஜேந்திரனின் ஆதரவாளர்களே வெற்றிபெற்றனர்.
கடந்த முறை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த சூப்பர் என்ற சுப்பராயனின்ஆதரவாளர்கள் தோல்வி அடைந்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல்ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்றிரவு தனது சகோதரர் வீட்டுக்கு சென்று விட்டு ராஜேந்திரன்நள்ளிரவில் காரில் வீடு திருப்பிக் கொண்டிருந்தார். அவருடைய நண்பர்கோவிந்தராஜ் உடனிருந்தார்.
அப்போது சுப்பராயன் உட்பட 10 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து ஜோதிராஜேந்திரனையும், கோவிந்தராஜையும் சரமாரியாக வெட்டியது. இதில் ஜோதிராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆபந்தான நிலையில் கோவிந்தராஜ், சென்னை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications