புஷ்ஷை தூக்கிலிட வேண்டும்-மகாதிர் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

புத்ரஜயா (மலேசியா):சதாம் உசேனுக்குக் கொடுக்கப்பட்ட அதே தண்டனையை ஜார்ஜ் புஷ்ஷுக்கும் கொடுக்க வேண்டும் என மலேசியமுன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மது கூறியுள்ளார்.

அமெ>க்காவின் தீவிர எதிர்ப்பாளர்களில் முக்கியமானவர் மகாதிர். 2003ம் ஆண்டு இவர் யூதர்கள் உலகைஆக்கிரமிக்க நினைக்கிறார்கள் என்று தெரிவித்த கருத்துக்கு அமெரிக்க அதிபர் புஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

Mahathir

இந்த நிலையில் சதாம் தண்டனை குறித்து மகாதிர் காட்டமான கருத்தை வெளியிட்டுள்ளார். மகாதிர்முகம்மதுவுக்குச் சொந்தமான அமைதிக் கழகம் சார்பில் போர்க் குற்றவாளிகளை அம்பலப்படுத்துதல் என்றபெயரில் ஒரு கண்காட்சி நடைபெறவுள்ளது.

இந்தக் கண்காட்சியில் மேற்கத்திய நாடுகள் செய்து வரும் போர்க் குற்றங்கள் தொடர்பான புகைப்படங்கள்காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. ஆப்கன், ஈராக், பாலஸ்தீனம், வியட்நாம் போர், ஹீரோஷிமா மீதானஅணுகுண்டு தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

Mahathir with Bush

இதுதொடர்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது மகாதிர் பேசுகையில், அமெரிக்க அதிபர் புஷ்ஷும்,இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரும்தான் உண்மையில் மிகப் பெரிய போர் குற்றவாளிகள். சதாம் உசேனின்கரங்களில் இருந்ததை விட இவர்களின் கையில்தான் அதிக ரத்தக்கறை உள்ளது.

புஷ் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சதாம் உசேன் சந்தித்த அதே கட்டப்பஞ்சாயத்து முன்பு அவரையும் நிறுத்தி, சதாமுக்கு கொடுக்கப்பட்ட அதே தண்டனையை புஷ்ஷுக்கும் தரவேண்டும்.

பிளேர் ஒரு குற்றவாளி. சதாம் செய்ததை விட அதிக அளவிலான தவறுகளை பிளேர் செய்துள்ளார். அமைதியைஏற்படுத்துவதாக கூறிக் கொண்டு ஈராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்க, இங்கிலாந்து படைகள் கொன்றுகுவித்ததை விட சதாம் உசேனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பமானது தான் என்றுகாட்டமாக கூறினார் மகாதிர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+