வெளிநாட்டு தமிழர் பிரச்சனைகள் களைய மாநாடு
டெல்லி:மலேசியாவில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க வகை செய்யும் ஒப்பந்தம்விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மலேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ சாமிவேலு கூறியுள்ளார்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 135 பேர் கொண்ட குழுவினருடன் டெல்லிவந்துள்ள டத்தோ சாமிவேலு நிருபர்களிடம் கூறியதாவது,
மலேசியாவில் 18 லட்சம் தமிழர்கள் உள்ளிட்ட 20 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அங்கு வேலைதேடி வருபவர்களில் ஒரு பிரிவினர் முறைப்படியான பணி நியமன ஆணை, தொழிலாளர் விசா பெற்றுவருகிறார்கள்.
மற்றொரு பிரிவினர் சுற்றுலா விசா பெற்று தரகர்கள் மூலம் மலேசியா வந்து விமான நிலையத்தில்பாஸ்போர்ட்டுகளை இழந்து பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதனால் மலேசியாவில் பணிபுரியும்இந்தியர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையில் மலேசிய அரசு ஒரு திட்டத்தை வகுத்தது. ஆனால்இந்திய அரசின் சில விதிமுறைகள் மலேசியாவுக்கு ஒத்து வராததால் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தமுடியவில்லை.
சமீப காலமாக இந்த பிரச்சனை தொடர்பாக இந்திய அரசுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வுகாணப்பட்டுள்ளது. எனவே இந்திய தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு தொடர்பாக இந்திய அரசுக்கும்,மலேசிய அரசுக்கும் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்களை ஒருங்கிணைத்து விரைவில் மாநாடு ஒன்றை நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்களுடையகுழந்தைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகள் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications