திருவையாறில் பிரமாண்ட பஞ்சரத்ன கீர்த்தனை
Subscribe to Oneindia Tamil
திருவையாறு:திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவில் இன்று ஆயிரக்கணக்கானகலைஞர்கள் பங்கேற்ற பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்தது.
சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 160வது ஆராதனை விழா கடந்த 4ம் தேதி விமரிசையாக தொடங்கியது.
ராமநாமதத்திலேயே உயிர் வாழ்ந்து, கர்நாடக சங்கீதத்தில் புகழ் பெற்று விளங்கிய சத்குரு ஸ்ரீதியாகராஜசுவாமிகள் திருவாரூரில் பிறந்து, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் வாழ்நதார். திருவையாறு வடகரையில்முக்தி அடைந்தார்.
அவர் முக்தியடைந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஆராதனை விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
விழாவின் முக்கிய அம்சமாக இன்று காலை ஆயிரக்கணக்கான கலைஞர்கள் கலந்துகொண்ட பிரம்மாண்டமான பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடந்தது.
இந்த ஆராதனை விழா நாளை நிறைவு பெறுகிறது.












Click it and Unblock the Notifications