சிறந்த மனிதராக அப்துல் கலாம் தேர்வு
மும்பை:மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சித்ரலேகா என்ற வார இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் 2006ம் ஆண்டின்சிறந்த மனிதராக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2006ம் ஆண்டின் சிறந்த மனிதர் யார் என்பது குறித்த கருத்துக்கணிப்பை சித்ரலேகா நடத்தியது. வாசகர்களிடம்நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அப்துல் கலாம், இசையமைப்பாளர் மற்றும் பாப் பாடகர் ஹிமேஷ் ரேஷ்மய்யா, தொழிலதிபர்கள் முகேஷ்அம்பானி, அனில் அம்பானி, ரத்தன் டாடா, ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், மத்திய அமைச்சர்கள்ப.சிதம்பரம், சரத் பவார், கி>க்கெட் வீரர் தோணி உள்ளிட்டோரில் யாரை சிறந்த மனிதராக கருதுகிறீர்கள் எனவாசகர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
மும்பை, அகமதாபாத், சூரத், ராஜ்கோட், வதோதரா உள்ளிட்ட நகரங்களில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.இதில் அப்துல் கலாம் முதலிடத்தைப் பிடித்து 2006ம் ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மொத்தம் 32 சதவீதவாசகர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
ரேஷ்மய்யா 19 சதவீத வாக்குகளுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். அனில் அம்பானிக்கு 3வது இடம்கிடைத்தது. லாலுவும், தோணியும் தலா 11 சதவீத வாக்குகளுடன் 4வது, 5வது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
தோணியை 2006ம் ஆண்டின் சிறந்த வீரராக வாசகர்கள் தேர்வு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications