நக்சல் ரவீந்தரன் தினம்-பரபரப்பில் போலீஸ்
தர்மபுரி:நாளை நக்சலைட்டு ரவீந்தரன் நினைவு நாளையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில்ஈடுபட்டுள்ளனார்.
நக்சலைட்டுகள் இயக்க தலைவரான சக்திவேல் என்கிற ரவீந்திரன் நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது.தர்மபுரி மாவட்டத்தில் பூதிப்பட்டியில் உள்ள அவரது நினைவு தூணுக்கு அஞ்சலி செலுத்தவரும் நக்சலைட்டுகள்வன்முறை சம்பவங்களில் ஈடுபடாலாம் என்று கருதப்படுவதால் தர்மபுரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்புபோடபட்டுள்ளது.
இந்நிலையில் கர்ாநாடக மாநில எல்லை பகுதியில் உள்ள பன்னப்பட்டி, ராசிமணல் ஆகிய பகுதிகளில் துப்பாக்கிஏந்திய போலீசார் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நக்சலைட்டுகள் ஆதரவு கிராமங்களில் கியூ பிரிவு போலீசாரும், நக்சலைட்டு பிரிவு போலீசாரும் மாறு வேடத்தில்கண்காணித்து வருகிறார்கள். மேலும் இப்பகுதியில் வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது.
ரவீந்திரன் நினைவு நாளையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் விடுமுறையில் சென்றுள்ள போலீஸ் அதிகாரிகள்அனைவரும் தனது விடுமுறையை ரத்து செய்து விட்டு பணிக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்தர்மபுரி மாவட்ட போலீஸார், ஆயுதப்படை போலீசார் உள்பட 800 போலீசார் பாதுகாப்பு பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications