உலகின் பாதுகாப்பு மிகுந்த நகரமாகும் துபாய்
துபாய்:2010ம் ஆண்டுக்குள் துபாயை உலகின் பாதுகாப்பான நகரமாக மாற்றும் வகையில் ஸ்மார்ட் சிஸ்டம் என்றபுதிய திட்டத்தை துபாய் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றத்திட்டமிட்டுள்ளது.
ஸ்மார்ட் சிஸ்டம் என்பது செயற்கைக் கோள் மூலமான பாதுகாப்பு முறையாகும். இதன்படி, ஒவ்வொருகட்டடத்திலும் மின்னணு கண்காணிப்புக் கருவி பொருத்தப்படும். சம்பந்தப்பட்ட கட்டடத்தில் தீவிபத்து அல்லதுவிபத்து ஏற்பட்டால் செயற்கைக் கோள் உதவியுடன் உள்நாட்டு பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல்கொடுக்கும்.மேலும் தீயணைப்புத் துறைக்கும் தானாகவே தகவல் போய் விடும். இதன் மூலம் பேரிழப்புகள், பெரும் நஷ்டம்போன்றவை தடுக்கப்படும். துபாயில் தற்போது 540 கட்டடங்கள், 1500 வீடுகள், 390 அடுக்குமாடி வீடுகளில்இந்த பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் 8000 கட்டங்களில் இதுபோல 4600 பாதுகாப்பு சாதனங்களைப் பொருத்தும் பணி நடந்து வருகிறது.அடுத்த 2 ஆண்டுகளில் 1 லட்சம் கட்டடங்களுக்கு இந்தக் கருவிகளைப் பொருத்தி விட இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் உலகிலேயே மிகவும் பாதுகாப்பு நிறைந்த நகரமாக துபாய் மாறி விடும் எனஉள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications