தமிழகத்தில் 5 ஜவுளி பூங்காக்கள்: இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:ஜவுளி ஏற்றுமதியை அதிக>க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய ஜவுளித்துறைஇணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 2010ம் ஆண்டுக்குள் ஜவுளிஏற்றுமதியை 10 பில்லியன் டாலராக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருப்பூர் ஜவுளி மற்றும் சாயப் பட்டறைகளிலிருந்து வெளியாகும் கழிவு நீரைகுழாய்கள் மூலம் கடலில் கலக்க வைக்க நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும் எனகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசும், தமிழக அரசும்இணைந்து பரிசீலித்து முடிவெடுக்கும்.

2010ம் ஆண்டுக்குள் சணல் ஏற்றுமதியை ரூ. 5,000 கோடியாக அதிகரிக்கநடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இது 1,000 கோடி ரூபாபாக உள்ளது.

மேற்கு வங்கம் மாநிலத்திலும் அதன் சுற்றுப் புறங்களிலும் மட்டுமே பிரபலமாகஇருந்த சணல் உற்பத்தி இப்போது தமிழகம், ஆந்திரா, கர்நாடகத்திலும் பரவியுள்ளது.மகளிர் சுய உதவிக் குழுக்களிடையே சணல் உற்பத்திப் பொருட்களுக்கு நல்லவரவேற்பு உள்ளது.

கடலூர், பல்லடம், பெருந்துரை ஆகிய இடங்களில் ரூ. 50 முதல் ரூ. 100 கோடிமதிப்பில் ஐந்து ஜவுளிப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மாநில அரசு மற்றும் தனியார் துறையினருடன் இணைந்து இந்த ஜவுளிப் பூங்காக்கள்அமைக்கப்படும்.

மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு மிகச் சிறப்பாக பயன்படுத்தி அமல்படுத்திவருகிறது. இதில் நாட்டிலேயே தமிழகம்தான் முன்னணியில் உள்ளது என்றார்இளங்கோவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+