ஜல்லிக்கட்டுக்கு இந்த ஆண்டு மட்டும் அனுமதி

Subscribe to Oneindia Tamil

மதுரை:அலங்காநல்லூரில் இந்த ஆண்டு மட்டும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்திக் கொள்ள மதுரை உயர்நீதிமன்றக் கிளை அனுமதிஅளித்துள்ளது.

Jallikattu

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிநடத்தப்படும். உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும்வருகை தருவர்.

கடந்த ஆண்டு காளை முட்டி பாண்டியராஜன் என்பவர் மரணமடைந்தார். இதையடுத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கக் கோரி பாண்டியராஜனின் தந்தை நாகராஜன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

Jallikattu

அதை விசாரித்த நீதிபதி பானுமதி, ஜல்லிக்கட்டு நடத்த இடைக்காலத் தடை விதித்தார். இந்த தடையை ரத்து செய்யக் கோரிஅலங்காநல்லூரைச் சேர்ந்த பாலாஜி, ரகுபதி ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், ஜனார்த்தன ராஜா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த ஆண்டு மட்டும்ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+