எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் பதவி: ராஜபக்ஷே
கொழும்பு:எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் பதவி தர இலங்கை அதிபர் ராஜபக்ஷேதிட்டமிட்டுள்ளார்.
இலங்கை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. எதிர்க்கட்சியினரும்அமைச்சரவையில் இடம்பெறவுள்ளனர்.
இலங்கையில் அதிபர் ராஜபக்ஷே அரசு சிறுபான்மை அரசாக உள்ளது. அரசுக்குஆதரவு கொடுத்து வந்த சில முக்கிய கட்சிகள் அமைச்சரவையிலிருந்து விலகியதால்ராஜபக்ஷே அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது.
இதையடுத்து முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, சிறுபான்மை தமிழர்மற்றும் முஸ்லீம் கட்சிகளை கூட்டணியில் இழுக்க அரசு முயன்றது. ஐக்கிய தேசியக்கட்சியுடன் சமீபத்தில் ராஜபக்ஷே இதுதொடர்பாக ஒப்பந்தமும் போட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க ராஜபக்ஷேமுடிவு செய்துள்ளார். இதையடுத்து அமைச்சரவை விரிவுபடுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து அதிபர் மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,எதிர்க்கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவுள்ளது.இதுதொடர்பான நடவடிக்கையில் அதிபர் ராஜபக்ஷே இறங்கியுள்ளார் என்றார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பிக்கள் உள்ளனர். இதில் ராஜபக்ஷேகட்சிக்கு 70 எம்.பிக்கள் மட்டுமே உள்ளனர். ஆட்சி கவிழ்வதைத் தடுக்கும்முகமாகவே எதிர்க்கட்சியினருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்குஅமைச்சர் பதவிகளைக் கொடுத்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில்இறங்கியுள்ளார் ராஜபக்ஷே.












Click it and Unblock the Notifications