நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி
சென்னை:4 செயற்கைக் கோள்களுடன் ஏவப்படவுள்ள பி.எஸ்.எல்.வி-சி7 ராக்கெட்டுக்கான கவுண்டவுன் தொடங்கியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் நாளை (10ம் தேதி) விண்ணில் ஏவப்படவுள்ளபிஎஸ்எல்விக்கான கவுண்டவுன் நேற்று காலை 5.58 மணிக்கு தொடங்கியது. நாளை காலை 9.30 மணியளவில்இது விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கவுண்டவுன் சீராக சென்று கொண்டிருப்பதாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையவளாகத்தில் உள்ள மிஷன் கண்ட்ரோல் மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி ஜிஎஸ்எல்வி- எப்02 என்ற ராக்கெட்டை ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்தது.அதன் பின்னர் ஏவப்படும் முதல் ராக்கெட் இதுதான். எனவே பி.எஸ்.எல்.வி. சி7 ராக்கெட்டை வெற்றிகரமாகஏவ விஞ்ஞானிகள் படு கவனமாக இருக்கிறார்கள்.
10ம் தேதி ஏவப்படவுள்ள பிஎஸ்எல்வி ராக்கெட், நான்கு செயற்கைக் கோள்களை எடுத்துச் செல்லவுள்ளது.
இந்தியாவின் கார்டோசாட்-2 (680 கிலோ எடை கொண்ட தொலை உணர்வு செயற்கைக் கோள்), 550 கிலோஎடை கொண்ட ஸ்பேஸ் கேப்சூல் ரெக்கவரி சோதனை சாதனம், இந்தோனேசியாவின் லபான்-டுபாசாட்செயற்கைக் கோள், அர்ஜென்டினாவின் 6 கிலோ எடை கொண்ட பெஹ்யூன் சாட் செயற்கைக் கோள் ஆகியவைராக்கெட்டில் எடுத்துச் செல்லப்படவுள்ளது.
இந்திய ராக்கெட் மூலம் நான்கு செயற்கைக் கோள்கள் எடுத்துச் செல்லப்படுவது இதுவே முதல் முறையாகும்.இதில் முக்கியமானது எஸ்.ஆர்.இ. எனப்படும் ஸ்பேஸ் ரெக்கவரி சோதனை சாதனம்.
இது விண்வெளிக்குச் சென்று விட்டு மீண்டும் பூமிக்குத் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமிக்குத்திரும்புகையில், ஸ்ரீஹரிகோட்டா அருகே உள்ள கடல் பகுதியில் செயற்கைக் கோள் விழும்படிவடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் இதை பலமுறை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணுக்கு சென்று மீண்டும் பூமிக்குத் திரும்பும் வகையிலான விண்வெளி ஓடங்களைத் தயாரிக்கும்இந்தியாவின் கனவுக்கு இந்த சோதனை முயற்சி மிகவும் உதவியாக இருக்கும்.
இதற்கிடையே, திருப்பதிக்கு வந்திருந்த இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் அங்கு செய்தியாளர்களிடம்பேசுகையில், பி.எஸ்.எல்.வி.யை ஏவுவதற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. திட்டமிட்டபடி ராக்கெட் ஏவப்படும்.முதல் ஏவு தளத்திலிருந்து 10ம் தேதி காலை 9.23 மணிக்கு ராக்கெட் ஏவப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications