உ.பி: 3 அமைச்சர்கள் திடீர் ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
லக்னெள:உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 3 ராஷ்ரீய லோக் தள்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
தங்களது ராஜினாமா கடிதங்களை கட்சியின் தலைவர் அஜீத் சிங்கிடம் இன்று அவர்கள் அளித்தனர்.
இந்தக் கடிதங்களை முதல்வருக்கு அனுப்பி வைக்கப் போவதாகவும், இதுவரை முலாயமுடம் வைத்திருந்தகூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அஜீத் சிங் அறிவித்துள்ளார்.
இதனால் முதல்வர் முலாயமின் சமாஜ்வாடி கட்சி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இம் மாநிலத்தில் விரைவில்சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் முலாயமுக்கு தோல்வி உறுதி எனத் தெரியவந்துள்ளதால் அஜீத் சிங் கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அவர் காங்கிரசுடன் கைகோர்க்கக் கூடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications