பலாத்கார முயற்சியில் நெல்லை பெண் கொலை?
திருநெல்வேலி:நெல்லை பாளையங்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண் பலாத்கார முயற்சில் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பெருமாள்புரம் சாராள்தக்கர் கல்லூரி அருகே உள்ள ஜோசப் தெருவில் சபையர் கிங்க அபார்ட்மென்டில் வசித்துவரும் வெங்கடசுப்பிரமணியத்தின் மனைவி மனைவி விஜயலட்சுமி பகல் நேரத்தில் வீட்டில் தனியேஇருந்தபோது கொலை செய்யப்பட்டார்.
![]() |
கத்தியால் குத்தி கொலை செய்து, அவர் அணிந்திருந்த 20 பவுன் நகையும் திருடப்பட்டுள்ளது.
விஜயலட்சுமியை பலாத்காரம் செய்ய முயன்று அந்த மர்ம கொலை செய்திருக்கலாம், விஷயத்தை திசை திருப்பநகையைத் திருடிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக வெங்கடசுப்பிரமணியனிடம் கார் ஓட்டுனராக பணியாற்றிய 4 பேரிடமும், அருகே உள்ள கடைஊழியர்கள் மற்றும் சலவை தொழிலாளர், பால்காரர் மற்றும் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அந்தப் பகுதி ஆட்டோ ஓட்டுனர்களிடமும் விசாரணை நடந்துள்ளது.
மேலும் கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலையான விஜயலட்சுமிக்கு அபிநயா,ஷோபனா, உத்ரா என மூன்று மகள்கள் உள்ளனர்.













Click it and Unblock the Notifications