மருத்துவ கல்வி-இடஒதுக்கீடு கோரும் மத்திய அரசு
டெல்லி:எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ முதுகலை படிப்புகளில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினமாணவர்களுக்கு 22.5% இடஒதுக்கீடு வழங்க அணுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல்செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள அவசர மனுவில் கூறியிருப்பதாவது,
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம், மருத்துவ முதுகலை படிப்புக்கான நுழைவுத் தேர்வை வரும் 14ம்தேதி நடத்துகிறது. இதன் முடிவுகள் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகையால் முதுகலை படிப்புகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வரும் 2007-2008கல்வி ஆண்டு முதல் 22.5% இட ஒதுக்கீடு வழங்க அனுமதி அளிக்க வேண்டும். எனவே இதனை அவரசவழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளது.
இந்த மனுவை தமைமை நீதிபதி ஓய்.கே.சபர்வால் தலைமையிலான பெஞ்ச பரிசீலித்து வரும் 12ம் தேதிவிசாரணை நடைபெறும் என அறிவித்தது.












Click it and Unblock the Notifications