சதாம் உசேன் தூக்கு தவறானது-திடீர் பிளேர்

Subscribe to Oneindia Tamil
saddam

லண்டன்:ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டது தவறானது என இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர்திடீரென கருத்து தெரிவித்துள்ளார்.

சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதை கண்டித்தும், ஆதரவு தெரிவித்தும் அனைத்து நாட்டு தலைவர்களும் தங்களதுகருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் எந்த கருத்தும் தெரிவிக்கமால் இருந்துவந்தார்.

சதாம் தூக்கிலிடப்பட்டபோது பிளேர் அமெரிக்காவில் இருந்தார். இப்போது தத் முதன் முறையாக தனதுகருத்தினை தெரிவித்துள்ளார். பிளேர் கூறுகையில்,

சதாம் உசேன் செய்த குற்றங்கள் மன்னிக்க முடியாதது. அவருடைய காட்டுமிராண்டித்தனத்தை யாரும் மறந்துவிடவும் முடியாது. ஆனால் அவர் செய்த குற்றத்துக்கு தூக்கில் போடுவது தான் சரியான தண்டனை என்பைதஎன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவரை தூக்கில் போட்டதை முற்றிலும் தவறாக கருதுகிறேன். அதிலும் அவர் தூக்கு போடப்பட்ட முறை இன்னும்மோசமானது. ஒரு குற்றத்துக்கு இன்னொரு குற்றம் தண்டனையாக இருக்க முடியாது. அவரை தூக்கில்போட்டபோது நடத்திய முறையை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நாகரீகம் அடைந்த யாராலும் இதைஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே இராக்குக்கு மேலும் 21,500 வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஆனால்,இங்கிலாந்து இனி எந்த கூடுதல் படைகளையும் இராக்குக்கு அனுப்பாது என அறிவித்துவிட்டது. இங்கிலாந்தின்வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்ரெட் பெக்கட் இதனை தெரிவித்தார்.

இந் நிலையில் சதாம் தூக்கிலிடப்பட்டபோது எடுக்கப்பட்ட இரண்டாவது வீடியோவில் இறந்து கிடக்கும் சதாமின்கழுத்தில் பெரிய வெட்டுக் காயமும் ரத்தமும் காணப்படுகிறது. தூக்குக் கயிறு இறுக்கியபோது கழுத்துஅறுபட்டதாகத் தெரிகிறது. தூக்கிலிடும்போது காயமின்றி தூக்கிட வேண்டும் என்ற சர்வதேச விதி உள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+