துபாய்: தமிழக தொழிலதிபருக்கு கலாம் விருது
Subscribe to Oneindia Tamil
துபாய்:2006ம் ஆண்டுக்கான வெளிநாட்டில் வசிக்கும்சிறந்த இந்திய வர்த்தகப் பிரமுகருக்கான விருதை கீழக்கரையைச்சேர்ந்தவரும் துபாயில் வசிப்பவருமான சையத் எம். சலாஹூதீனுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்வழங்கினார்.
9ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்த விருதினை சலாஹூதீனுக்கு குடியரசுத் தலைவர் வழங்கினார்.
![]() |
இடிஏ அஸ்கான் மற்றும் இடி ஸ்டார் ஆகிய நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக சலாஹூதீன் உள்ளார்.மிகவும் குறைந்த அளவிலான ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று 50,000ஊழியர்களுடன், 21 நாடுகளில் 140 கிளைகளுடன் பல்வேறு துறைகளில் பிரமாண்டமாக பரந்து விரிந்து பெரும்வர்த்தக சாம்ராஜ்யமாக மாறியிருக்கிறது.
இதுகுறித்து இடிஏ அஸ்கான் நிறுவனத்தில் கடந்த 22 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பொறியாளர் எம்.ஜே.எம்.இக்பால் கூறுகையில், எங்கள் நிர்வாக இயக்குனர் சலாஹூதீன் மற்றும் நிறுவனங்களின் வளர்ச்சி,தென்னிந்தியர்களுக்கு பெருமை அளிப்பவை என்றார்.
தனக்கு வழங்கப்பட்ட விருதை தனக்கு சீரிய பண்புகளைப் புகட்டி வளர்த்து வழி காட்டிய பெற்றோர்களுக்குஅர்ப்பணிப்பதாக சலாஹூதீன் கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications