குமரியில் சூறாவளி: படகு போக்குவரத்து ரத்து
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:கன்னியாகுமரி கடலில் கடும் சூறாவளி காற்று வீசியதால் படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
![]() |
கன்னியாகுமரி, ஆரோக்கியபுரம், லீ புரம் கடல் பகுதியில் கடும் சூறாவளி காற்று வீசியது. இதனால் அலைகளின்சீற்றமும் அதிகரித்தது. இதையடுத்து விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகுபோக்குவரத்து நிறுத்தப்பட்டது.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்க்க சென்றிருந்து 500க்கும் மோற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நெடுநேரத்துக்குப் பின் படகுகள் மூலம் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
காற்றின் வேகம் காரணமாக கன்னியாகுமரி, ஆரோக்கியபுரம், லீ புரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குசெல்லவில்லை.













Click it and Unblock the Notifications