பாதுகாப்பு துறையில் ஒரு மகா பிராடு அதிகாரி!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜி.டி.ஆர்.ஈ (கேஸ் டர்பைன் ரிசர்ச் எஸ்டாபிளிஷ்மெண்ட்)ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த அதிகாரி மீது வருமானத்தை மீறி சொத்து குவித்ததாக சிபிஐ வழக்குப் பதிவுசெய்துள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தித்துறையின் (டி.ஆர்.டி.ஓ) முக்கியமான பிரிவு இந்த கேஸ் டர்பைன்ஆராய்ச்சி மையம். இதில் டெக்னிகல் அதிகாரியாக பணியாற்றும் கேரளத்தைச் சேர்ந்த கே.பி.மோகன் குமார்பெங்களூரில் மட்டும் 17 பிளாட்டுகளை வாங்கிப் போட்டுள்ளார்.

இத்தனைக்கும் இவரது சம்பளம் மாதம் ரூ. 20,000த்தை தாண்டாது. ஆராய்ச்சி நிறுவனத்தில் காண்ட்ராக்டகள்தருவதில் ஆரம்பித்து எல்லா வகையிலும் புகுந்து விளையாடி ஊழல் செய்துள்ளார் மோகன் குமார்.

இவரது வீட்டில் சோதனை நடத்தியபோது ரூ. 3.4 லட்சம் ரொக்கம் சிக்கியது. மேலும் வங்கி முதலீடுகள் உள்படரூ. 45 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள், 17 பிளாட்டுகளின் ஆவணங்களும் மாட்டின. மேலும் கேரளத்திலும் ஒருபங்களாவை வாங்கியுள்ளனர். அந்த ஆவணமும் சிக்கியது.

மோகன்குமார்-பிந்துவின் பெயரில் எச்டிஎப்சியில் உள்ள லாக்கரை சிபிஐ அதிகாரிகள் திறந்து பார்த்தபோதுஅதில் 300 பவுன் தங்க நகைகள் குவிந்து கிடந்தன.

இதையடுத்து மோகன் குமார் மீதும் அவரது மனைவி பிந்து மீதும் சிபிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவுவழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

இந்த பிராடு தம்பதியிடம் டயோடா கரோலா, டயோடா குவாலிஸ், ஹூண்டாய் சான்ட்ரோ ஆகிய கார்களும்உள்ளன. அவையும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+