எது ஒரிஜினல்?-ஆணையம் முடிவு செய்யும்: எல்ஜி
திருச்சி:உண்மையான மதிமுக எது என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என போட்டி மதிமுக அவைத்தலைவர் எல்.கணேசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வைகோ தலைமையில் நேற்று கூடிய மதிமுக பொதுக் குழுவில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாககூறி எம்பிக்கள் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கட்சியில் அவர்கள் வகித்த பொறுப்புகளில்இருந்த நிரந்தரமாக நீக்கப்பட்டனர்.
ஆனால் அவர்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் நீடிப்பார்கள் என்று வைகோ பொதுக் குழுவில்அறிவித்தார். இதுகுறித்து எல்.கணேசன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது,
மதிமுகவில் பொறுப்புகளில் இருந்து என்னையும், செஞ்சி ராமச்சந்திரனையும் நிரந்தரமாக நீக்குவதாக வைகோகூறியுள்ளார். ஆனால் அடிப்படை உறுப்பினர்களாக நாங்கள் நீடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மதிமுகவில் இருந்து எங்களை நீக்கிவிட்டால் நாங்கள் சுதந்திரமாக செயல்பட முடியும். கட்சிதாவல் சட்டத்தின்கீழ் எங்கள் எம்பி பதிவியை பறிக்க முடியாது. அந்த பயத்தால் தான் வைகோ மதிமுக உறுப்பினர் பதவியில்இருந்து எங்களை நீக்க முடியாமல் தவிக்கிறார்.
நேற்று வைகோ கூட்டிய பொதுக் குழுவிற்கு அதிக பொதுக்குழு உறுப்பினர்கள் வந்து மெஜாரிட்டியைநிருபித்துள்ளனர் என்பதை ஏற்க முடியாது. நாங்கள் ஏற்கனவே பொதுக்குழுவை கூட்டி தேர்தல் ஆணையத்திற்குஅனுப்பியுள்ளோம். யார் உண்மையான மதிமுக என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என அவர்கூறினார்.












Click it and Unblock the Notifications