அபாய நிலையில் ஊட்டி மலை பாதை-குழு ஆய்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:ஊட்டி மலைப் பாதை ஆபத்தான நிலையில் இருப்பதாக பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இதுகுறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக பொது நல வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. அதில்,

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர்-ஊட்டி வழியாக காக்கநல்லாவரை செல்லும் சாலைகள் படு மோசமாகஉள்ளன. இந்த சாலைகள் பல காலமாக பராமரிக்கப்படாமலேயே உள்ளதால் விபத்துக்கள் ஏற்படும்அபாயகரமான சூழல் நிலவுகிறது. எனவே இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்டு சாலைகளை சீர் செய்யஉத்தரவிட வேண்டும்.

மேலும் இந்தச் சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூலித்து சுற்றுலா பயணிகள்சுரண்டுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர், மேட்டுப்பாளையத்தில் இருந்துகாக்கநல்லாவரை உள்ள தேசிய நெடுஞ்சாலையையும் நகராட்சிக்கு சொந்தமான சாலையையும் ஆய்வு செய்யநிபுணர் குழுவை அமைக்க உத்தரவிடுகிறோம்.

புவியியல் நிபுணர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் அடங்கிய இந்தக் குழு சாலைகளை ஆய்வு செய்து வரும்பிப்ரவரி 28ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து வந்துள்ள புகாருக்கு ஊட்டி,கூடலூர் நகராட்சிகளின் கமிஷ்னர்கள் 2 வாரத்தில் பதில் தர வேண்டும் என உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+