கொலை வழக்கில் உள்ளே தள்ளப்பட்டார் சித்து

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்:கொலை வழக்கில் சரணடைந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், மாஜி பாஜகஎம்.பியுமான நவ்ஜோத் சிங் சித்து பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.

Sidhuசித்துவும் அவரது நண்பர் ரூபிந்தர் சிங்கும் கடந்த 1988ம் ஆண்டு பாட்டியாலாவில்காரில் பயணம் செய்தபோது, குர்ணாம் சிங் என்பவரின் கார் மீது மோதினர்.

இதையடுத்து ஏற்பட்ட தகராறில் சித்துவும், ரூபிந்தர் சிங்கும் சேர்ந்து குர்ணாம் சிங்கைகண்மூடித்தனமாகத் தாக்கினர். அவரை காரை விட்டு இழுத்துப் போட்டு அடித்துஉதைத்தனர்.

இதில் படுகாயமடைந்த குர்ணாம் சிங் இறந்து போனார்.

இதையடுத்து சித்து மற்றும் அவரது நண்பர் ரூபிந்தர் சிங் மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டது. ஏகப்பட்ட இழுத்தடிப்புடன் நடந்த இந்த வழக்கில் கடந்த மாதம்சித்துவிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 1 லட்சம் ரூபாய் அபராதமும்வழங்கப்பட்டது.

இதையடுத்து தனது பாஜக எம்பி பதவியை சித்து ராஜினாமா செய்தார். இன்றுசண்டிகர் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதையடுத்து அவரை 14 நாட்கள் பாட்டியாலா சிறையில் நீதிமன்றக் காவலில்அடைக்க நீதிபதி உத்தரவிட்டதால் அங்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளேதள்ளப்பட்டார் சித்து. கூடவே அவரது நண்பர் ரூபிந்தரும் சிறையில்அடைக்கப்பட்டார்.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க கோரி சித்து சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது நாளை விசாரணைநடக்கவுள்ளது.

இதற்கிடையே சித்துவுக்கு இன்னும் கூடுதலாக தண்டனை அளிக்க வேண்டும் என்றுகோரியும், இதை கொலை வழக்காகக் கருத வேண்டும் என்று கோரியும் குர்ணாம்சிங்கின் மகன் அசோக் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+