வங்கக் கடலில் இறங்கும் எஸ்ஆர்இ!
சென்னை:பிஎஸ்எல்வி மூலம் நேற்று விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்பேஸ் ரெக்கவரி எக்யூப்மெண்ட் (எஸ்.ஆர்.இ)எனப்படும் விண்வெளிக் கலம் வரும் 22ம் தேதி பூமிக்குள் நுழையும். பாராசூட் மூலம் அந்தக் கலம் கடலில்தரையிறங்கவுள்ளது.
![]() |
ரஷ்யாவின் சோயுஸ் விண்கல மாதிரியின் அடிப்படையில் இந்த எஸ்.ஆர்.இ வடிவமைக்கப்பட்டுள்ளது.விண்வெளிக்கு வீரர்களை ராக்கெட் மூலம் அனுப்பி இந்தக் கலம் மூலம் தான் திரும்பக் கொண்டு வருகிறதுரஷ்யா.
இப்போது தான் இந்தியாவும் முதன் முறையாக எஸ்.ஆர்.இயை வடிவமைத்து விண்ணுக்கு அனுப்பியுள்ளது.நேற்று 3 செயற்கைக் கோள்களுடன் இந்த கலமும் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.இப்போது விண்வெளியில் சுற்றி வரும் எஸ்.ஆர்.இ 22ம் தேதி வங்கக் கடலில் இறங்கும் என விக்ரம் சாராபாய்விண்வெளி மைய இயக்குனர் பி.என்.சுரேஷ் தெரிவித்துள்ளார்.
![]() |
இது 550 கிலோ எடை கொண்டதாகும். ரூ. 30 கோடி செலவில் உருவாக்கப்பட்ட எஸ்.ஆர், ராக்கெட் பறக்கஆரம்பித்த 120வது வினாடியில் புவியின் வட்ட பாதையில் ரிலீஸ் செய்யப்பட்டது.
12 நாட்கள் இது பூமியை சுற்றி வரும். அப்போது அது பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்.இதையடுத்து மீண்டும் பூமிக்குள் நுழையும். பாராசூட் மூலம் வங்ககடலில் தரையிறங்கும். கரையில் இருந்து 140கிமீ தொலைவில் இது கடலில் இறங்கி மிதக்கும். இதனை இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர்களைக்கொண்டோ அல்லது கப்பல் மூலமோ மீட்கவுள்ளனர்.
![]() |
மீட்கப்பட்டவுடன் அருகில் உள்ல எண்ணூர் துறைமுகத்துக்கு இது கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது.இதையடுத்து வாகனம் மூலம் ஹரிகோட்டாவுக்கு கொண்டு செல்லப்படும்.
எஸ்.ஆர்.இ. மீட்புப் பணிகளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் பலமுறை கடலில் சோதித்துப் பார்த்துள்ளது.அந்தப் படங்கள் தான் இங்கே இடம் பெற்றுள்ளன.















Click it and Unblock the Notifications