திருப்பதியில் விஐபிக்கள் தொல்லை!
திருப்பதி:தரிசனத்துக்காக அடிக்கடி திருப்பதிக்கு வர வேண்டாம், பக்தர்களுக்கு இடைஞ்சலைத் தர வேண்டாம் என்பதுதான் என திருப்பதி தேவஸ்தான தலைவர் கருணாகர் ரெட்டி முக்கிய பிரமுகர்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில்,
திருமலையில் ஒரு நிமிடத்துக்கு 600 பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இதில் முக்கியப் பிரமுகர்களும்வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம், இதனால் பொது மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.
இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கவும், திருமலைக்கு வந்ததன் முழுப் பயன் கிடைக்கவும் ஒரு வினாடிதரிசனமே போதும். இதனால் அடிக்கடி வந்து தான் தரிசிக்க வேண்டிதில்லை என ஆகம சாஸ்திரமே கூறுகிறது.
பக்தர்களின் நெரிசலை தவிர்க்கவே மகா லகு தரிசன முறையை அறிமுகப்படுத்தினோம். இதன் மூலம் தினமும்70,000 பேர் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
முக்கிய பிரமுகர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள், தரிசனத்துக்காக அடிக்கடி திருப்பதிக்கு வர வேண்டாம்,பக்தர்களுக்கு இடைஞ்சலைத் தர வேண்டாம் என்பது தான்.
திருமலையே வெங்கடாசலபதிக்குத் தான் சொந்தம். இங்கு மாற்று மதத்தினர் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கமாட்டோம். இந்த விஷயத்தில் தேவஸ்தானம் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications