தமிழக நகர்ப்புற மேம்பாட்டுக்கு ரூ.352 கோடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:மதுரை உள்பட 6 நகரங்களின் மேம்பாட்டு பணிகளுக்காக மத்திய அரசு ரூ. 352.83கோடி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது.
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பிப்பு திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மதுரை,தாம்பரம் உள்பட 6 பகுதிகள், நகர்கள் மேம்படுத்தப்படவுள்ளன.
இதற்காக மத்திய அரசு ரூ. 352.83 கோடியை ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்தநிதியில் மதுரை திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மாநகர பகுதிகளின் மேம்பாட்டுபணிகளுக்காக ரூ. 9.69 கோடி ஒதுக்கப்படும். இதில் முதல் தவணையாக ரூ. 48லட்சம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வசதியை மேம்படுத்துவது உள்ளிட்ட திட்டப்பணிகளுக்கு ரூ. 32.61 கோடி ஒதுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் முதல்தவணையாக ரூ. 2.85 கோடி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications