யோபு மீண்டும் கைது: பாய்கிறது குண்டாஸ்?
சென்னை:வீடு கட்டித் தரும் திட்டம் என்ற பெயரில் பல கோடி பணத்தை மோசடி செய்த குஜால் போலி பிஷப் யோபுசரவணன் இன்னொரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைதுசெய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
வேலூரைச் சேர்ந்த யோபு சரவணன் தன்னைத் தானே பிஷப்பாக அறிவித்துக் கொண்டு, வீடு கட்டித் தரும்திட்டத்தை அறிவித்து காண்டிராக்டர்களிடம் பல கோடி பணத்தை சுருட்டினார். அந்தப் பணத்தில் துணைநடிகைகள், 4 மனைவிகள் என குஜால் வாழ்க்கை வாழ்ந்தார்.
![]() |
யோபுவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். யோபுவிடமிருந்து ரூ. 2 கோடி மதிப்புள்ளசொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது கூட்டாளி ராஜேந்திரனும் கைது செய்யப்பட்டார். இருவரும்புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஒரு வழக்கில் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்து விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில்சென்னையைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் தன்னிடம் யோபு சரவணன் ரூ. 1 லட்சம் பண மோசடி செய்ததாகசிபிசிஐடி போலீஸில் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரின் பேரில் யோபுவை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். மீண்டும் யோபு ஜாமீனில்தப்பிவிடாமல் தடுக்க, அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாகதெரிகிறது.













Click it and Unblock the Notifications