தூக்கு: அப்சலின் மறு ஆய்வு மனுவும் தள்ளுபடி
டெல்லி:நாடாளுமன்ற தாக்குதலில் மரண தண்டனை விதித்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி அப்சல் குரு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவைஉச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
நாடாளுமன்றம் மீதான தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து அவரது சார்பில்குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அப்சலுக்கு சாதகமாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது, அப்சலைஉடனடியாக தூக்கிலிட வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இந்தச் சூழ்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுஅப்சல் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நேற்று இந்த மனுவை தள்ளுபடி செய்தது.தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால், நீதிபதிகள் கே.ஜி.பாலகிருஷ்ணன்,பி.என்.அகர்வால், நலோகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த மனு விசாரணைக்குஉரியதல்ல என்று கூறி தள்ளுபடி செய்து விட்டது.
இதேபோல நாடாளுமன்றத் தாக்குதலில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதிக்கப்பட்ட ஷெகத் உசேன் குருவின் மறு பரிசீலனை மனுவையும் இதே பெஞ்ச்தள்ளுபடி செய்தது.
மறு பரிசீலனை மனு நிராகரிக்கப்பட்டதன் மூலம் அப்சலின் கடைசி வாய்ப்பும்பறிபோயுள்ளது. இனி தூக்குக் கயிற்றிலிருந்து அப்சல் தப்புவாரா, இல்லையா என்பதுகுடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ள கருணை மனு மீதான முடிவில் உள்ளது.












Click it and Unblock the Notifications