கேரள எல்லையில் தமிழர்கள் வீடு இடிப்பு
பாலக்காடு:பாலக்காடு அருகே கேரள எல்லையில் தமிழர்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு பெரும்பதற்றம் நிலவுகிறது.
தமிழக எல்லையில் அட்டப்பாடி பகுதியில் 30,000 தமிழர்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள கோட்டத்துறைபகுதியில் கோவை, லாலி ரோட்டைச் சேர்ந்த செல்வராஜ் (66). வெங்கடசாமி (40) உள்பட 50க்கும் மேற்பட்டோர்விவசாயம் செய்து வருகின்றனர்.
இவர்கள் முப்பது ஆண்டுகளாக இங்கு தங்கியுள்ளனர். இவர்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் 10க்கும்மேற்பட்ட தமிழர்கள் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மர்மக்கும்பல் இவர்கள் வசித்து வந்த வீடுகளுக்குள் புகுந்தது.
புல்டோசர் மூலம் ஐந்து வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியது. உயிருக்கு பயந்த செல்வராஜ், வெங்கடசாமிஉள்பட சிலர் அங்கிருந்து காட்டுக்குள் ஓடி தப்பினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அங்கு தங்கியிருந்தகூலி தொழிலார்கள் 10 பேரை அறையில் அடைத்து பூட்டியது. ஆடு, மாடு மற்றும் பல்வேறு பொருட்களைகும்பல் திருடிச் சென்றது.
இக்கும்பல் தாக்கியதில் ஆறுச்சாமி, மாதேஷ், சத்யா, பண்ணாரி, பழனிசாமி ஆகிய 5 கூலித் தொழிலாளர்கள்படுகாயம் அடைந்தனர். இவர்கள் அகளி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழர்கள் மீது நடந்த தாக்குதலில் நில மோசடி கும்பல் பின்னணியாக இருந்து செயல்பட்டது தெரியவந்துள்ளது.தமிழர்கள் பெயரில் உள்ள நிலங்களைப் போலி ஆவணம் தயாரித்து இவர்கள் விற்று வந்துள்ளனர். நிலஉரிமையாளர் செல்வராஜின் நிலத்தை, மன்னார்காட்டை சேர்ந்த அப்துல் என்பவருக்கு நாகராஜ் என்பவர் விற்றதகவல் கிடைந்துள்ளது.
செல்வராஜூக்கு சொந்தமான நிலத்தை தனக்கு சொந்தமான நிலம் என்றும், 10 தமிழர் குடும்பங்களை காலிசெய்யுமாறும் கூறி அப்துல், செல்வராஜை மிரட்டியுள்ளார். இதுகுறித்து செல்வராஜ் போலீசில் புகார்கொடுத்துள்ளார். புகாரை பெற்ற போலீசார் அப்துலை எச்சரித்து அனுப்பினர்.
இதுபோல 30க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமான ஏராளமான நிலத்தை போலி ஆவணம் தயாரித்துகாற்றாலை அமைக்க விற்றுதும் தெரியவந்துள்ளது.
தமிழக விவசாயிகள் கேரள மர்ம கும்பலால் தாக்கப்பட்டது கண்டித்து அட்டப்பாடியில் இன்று கண்டனஆர்ப்பாட்டம், கடையடைப்பு நடத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications