இலங்கையில் நிலச்சரிவு: 8 பேர் பலி
கொழும்பு:இலங்கையின் மத்தியப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் உள்ள பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச் சரிவில்8 பேர் பலியாயினர். 2000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இலங்கையிந் நுவரேலியா மாவட்டத்தில் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கு அடிக்கடி மண்சரிவும், நிலச்சரிவும் ஏற்படுவது வழக்கம். மழைக்காலங்களில் இவை அதிக அளவில் நடக்கும்.
நேற்று நுவரலிேயாவில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர்பரிதாபமாக இறந்தனர். 2000க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்குஅப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
வெளியுறவுத் துறைக்கு புதிய செயலர்:
இதற்கிடையில் இலங்கை வெளியுறவுத்துறை செயலாளராக பலித கொஹெனா நியமிக்கப்பட்டுள்ளார்.
பலித கொஹெனா ஐ.நா. சபையில் உயர் பதவி வகித்தவர். தற்போது விடுதலைப் புலிகளுடனான அமைதிப்பேச்சுவார்த்தையை நடத்தி வரும் அமைதி செயலகத்தின் தலைவராக இருந்து வந்தார். இதற்கு முன்புஆஸ்திரேலியாவில் இலங்கை வெளியுறவுப் பணியில் இருந்தார்.
தற்போது அவரை வெளியுறவுத் துறை செயலாளராக அதிபர் ராஜபக்ஷே நியமித்துள்ளார். இந்தப் பணியோடு,அமைதி செயலகப் பணியையும் அவர் பார்த்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications