பாவாடை: சானியாவுக்கு தடை விதிக்கவில்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை:குட்டைப் பாவாடை விவகாரத்தில் சானியா மிர்சாவுக்கு எதிராக தடை விதிக்கவில்லை என முஸ்லிம் சட்டவாரியம் தெரிவித்துள்ளது.
அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்வாரியத்தின் உதவி பொதுச் செயலாளர் அப்துர் ரகிம் குரேஷி நிருபர்களிடம் கூறியது,குட்டைப் பாவாடை அணிந்து விவகாரத்தில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு எதிராக முஸ்லிம சட்டவாரியம் கட்டளை (பத்வா) எதுவும் பிறப்பிக்கவில்லை. குரானில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளின்அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த பத்வா முடிவை மத அறிஞர் தான் எடுக்க முடியும். இமாம்கள் இந்தமுடிவை அறிவிக்க முடியாது என்று அவர் கூறினார்.
டென்னிஸ் மைதானத்தில் குட்டைப் பாவடை அணிந்து விளையாடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியபோது,மைதானத்தில் வேகமாக இயங்குவதற்கு வசதியாகத்தான் அந்த ஆடையை அணிவதாகவும், கவர்ச்சிக்காக அல்லஎன்று சானியா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications