கொலை-இ.முன்னணி தலைவர் மனைவிக்கு வேலை
Subscribe to Oneindia Tamil
தென்காசி:படுகொலை செய்யப்பட்ட தென்காசி இந்து முன்னணி தலைவர் மனைவிக்கு அரசுவேலை வழங்க முதல்வர் ஒப்புதல் அளித்திருப்பதாக தென்காசி தொகுதி எம்எல்ஏகருப்பசாமி தெரிவித்துள்ளார்.
நிருபர்களிடம் அவர்கூறியதாவது,
படுகொலை செய்யப்பட்ட தென்காசி இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியனின்மனைவிக்கு அரசு வேலையும், நிதியுதவியும் வழங்க வேண்டும் என்று அந்தக்குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து முதல்வரிடம் எடுத்து கூறினேன். முதல்வரும் அதை ஏற்றுக்கொண்டார்.இன்னும் 10 நாட்களில் குமார் பாண்டியனின் மனைவியை கோட்டைக்கு வரவழைத்துஅரசு வேலைக்கான உத்தரவும் நிதியுதவியும் வழங்கப்படும் என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications