இட ஒதுக்கீடு-மாநில அதிகாரம் கோரும் வைகோ
சென்னை:இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில சட்டமன்றங்களுக்கு வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க அதிமுக ஆட்சியின் போது ஜெயலலிதாவின் சீரியமுயற்சியில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைப் பாதுகாக்கவே இந்திய அரசியல் சட்டத்தின்9வது அட்டவணையில் இடம் பெறும் விதத்தில் 1994ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் அரசியல் சட்டத்திருத்தம் நிறைவேறியது.
திராவிட இயக்கத்தின் உன்னதமான சமூக நீதிக் கொள்கையைப் பாதுகாக்க நாடாளுமன்றத்தில் இந்த அரசியல்சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்ட பொது, 3 திமுக எம்பிக்கள் வாக்களிக்காமல் சமூக நீதிக்கு துரோகம்இழைத்தனர். எழுச்சி நடைப்பயணம் மேற்கொண்டு இருந்த நான், நடைபயணத்தை நிறுத்திவிட்டு டெல்லிக்குசென்று வாக்களித்து விட்டு திரும்பி வந்து மீண்டும் நடைபயணம் தொடர்ந்தேன்.
தற்போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட 9 நீதிபதிகளின் அமர்வு மன்றம் சமூக நீதியைப்பாதுகாக்கும் சட்டம் 9வது அட்டவனையில் இடம் பெற்று இருந்தாலும் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது என்றுதீர்ப்பு அளித்ததோடு, உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு மன்றம், இட ஒதுக்கீட்டுக் சட்டத்தைஆய்வு செய்யும் என அறிவித்துள்ளது.
இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும், சம நீதியும், சமூக நீதியும் கடந்தகாலங்களில் மறுக்கப்பட்ட கோடானு கோடி மக்களுக்கு உரிய நீதி வழங்கும் கோட்பாடே இட ஒதுக்கீட்டுக்கொள்கை. இதனைப் பாதுகாக்க அதிமுக அரசு தொலைநோக்ககோடு நடவடிக்கைகளை எடுத்து, தமிழகச்சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியதோடு, அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையிலும் இடம் பெற உரியநடவடிக்கைகளை மேற்கொண்டது.
ஆனால் இந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கும், நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கும் உரிய பாதுகாப்பை ஏற்படுத்தஉச்சநீதிமன்றத்தில் தக்கவிதத்தில் உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு தவறிவிட்டது. திமுக அரசு இந்தப்பிரச்சனையில் உரிய கவனம் செலுத்தாமல் கடமை தவறியது கண்டனத்துக்குரியது.
இட ஒதுக்கீட்டுக்கான அளவினை நிர்ணயிக்கும் அதிகாரமும், உரிமையும் அந்தந்த மாநிலச் சட்டமன்றங்களுக்குவழங்கவும், 50 சதவீதம் வரைமுறை நீங்கவும் உரிய விதத்தில் இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தங்களைமேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications