போகி புகையில் மறைந்த சென்னை!
சென்னை:இன்று போகி பண்டிகை தமிழகம் எங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.போகியையொட்டி சென்னை நகரில் பழைய பொருட்களை கொளுத்தியதால் ஏற்பட்டபுகை அதிகாலையில் நகர் முழுவதும் பெரும் புகை மூட்டத்தை ஏற்படுத்தியது.
பொங்கல் திருநாளின் முதல் நாள் விழாதான் போகி பண்டிகை. பழையன கழிதலும்,புதியன புகுதலும் என்ற மொழிக்கேற்ப, போகி பண்டிகையன்று பழையபொருட்களை தீவைத்துக் கொளுத்துவது வழக்கம்.
ஆனன், சமீப காலமாக பலர் டயர்களையும், பிளாஸ்டிக் பொருட்களையும் போட்டுக்கொளுத்த ஆரம்பித்துவிட்டனர். இதனால் காற்று மாசு ஏற்படும் என்பதால் டயர்,பிளாஸ்டிக் போன்றவற்றை கொளுத்தக் கூடாது என தமிழக காவல்துறையும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் எச்சரித்திருந்தது.
இந் நிலையில், இன்று அதிகாலை வீட்டுக்குத் தேவையில்லாத, பழைய பொருட்களைவீட்டு முன்பு போட்டுக் கொளுத்தி மக்கள் போகியைக் கொண்டாடினர். பலஇடங்களில் டயர்களும் போட்டுக் கொளுத்தப்பட்டன.
சென்னையில் அதிகாலையில் கடும் பனி நிலவி வரும் நிலையில் பழையபொருட்கள் கொளுத்தப்பட்டதால் நகர் முழுவதும் புகை மண்டலமாககாட்சியளித்தது. காலை 8 மணிக்குப் பிறகுதான் இந்த புகை மண்டலம் விலகி நார்மல்நிலைக்கு வந்தது.
நாளை பொங்கல் பண்டிகையும், நாளை மறுநாள் மாட்டுப் பொங்கலும்கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அதற்கு அடுத்த நாள்காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.












Click it and Unblock the Notifications