17 வயது மாணவனின் கீபோர்டு சாதனை!
திருச்சி:திருச்சியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவர் ராபின் பாட்ரிக்ஸ் தொடர்ந்து 72 மணி நேரம்கீ போர்டு வாசித்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
17 வயதாகும் பாட்>க்ஸ், செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படித்து வருகிறார்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்று கொண்டவரராம்.
கலாமின் விஷன் 2020 கனவை அனைவருக்கும் விளக்கும் வகையிலும், உலகஅமைதியை வலியுறுத்தியும் புதிய கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கபாட்ரிக்ஸ் திட்டமிட்டார். இதற்காக அவர் எடுத்துக் கொண்டதுதான் கீ போர்டு.
தற்போது 48 மணி நேரம் தொடர்ந்து கீ போர்டு வாசித்ததுதான் கின்னஸ் உலகசாதனையாக உள்ளது. இதை முறியடிக்க 72 மணி நேரம் தொடர்ந்து கீ போர்டுவாசிக்க தீர்மானித்தார் பாட்ரிக்ஸ். இதையடுத்து நேற்று தனது சாதனை வாசிப்பைத்தொடங்கினார்.
நகரின் முக்கியப் பிரபலங்கள் முன்னிலையில் கீபோர்டு வாசித்து வருகிறார்பாட்ரிக்ஸ். தனது சாதனை முயற்சி குறித்து பாட்ரிக்ஸ் கூறுகையில், நானே சொந்தமாகஎழுதி, இசையமைத்த பாடல்களை இந்த நிகழ்ச்சியில் வாசிக்கவுள்ளேன். திரைப்படப்பாடல்களும் இடம் பெறும்.
இதுவரை இயற்கை, நாட்டுப்பற்று குறித்து 30க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும்ஆங்கிலப் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளேன். கீ போர்டு வாசிப்பது எனதுபொழுதுபோக்கு அல்ல, வாழ்க்கை, சுவாசம் எல்லாமே அதுதான்.
நான்கு வயதாக இருந்தபோதே கீபோர்டு வாசிக்க ஆரம்பித்து விட்டேன். 3வருடங்கள் தீவிரமாக பயிற்சி எடுத்தேன். அதன் பிறகு கீ போர்டு வாசிப்பதில் திறமைபெற்றேன் என்றார் பாட்ரிக்ஸ்.












Click it and Unblock the Notifications