ஜெயலலிதாவுடன் வைகோ சந்திப்பு
சென்னை:மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைசந்தித்துப் பேசினார்.
முல்லைப் பெ>யாறு அணை விவகாரம் தொடர்பாக வைகோ சமீபத்தில் பாதயாத்திரைமேற்கொண்டார். பாதயாத்திரை முடிவடையும் நிலையில் எல்.கணேசன், செஞ்சிராமச்சந்திரனால் மதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்தப் பிரச்சினையை மிகக் கடுமையாக போராடி சமாளித்து வரும் வைகோ,கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தையும் நடத்தி முடித்தார்.
இந் நிலையில் நேற்று ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பின்போது முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்து இருவரும்விவாதித்தாகத் தெரிகிறது.
மேலும், சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறை வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிஇப்ராகிம் கலிபுல்லா 99 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றுகூறியிருப்பது குறித்தும் முக்கியமாக இரு தலைவர்களும் விவாதித்ததாககூறப்படுகிறது.
திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை அதிகப்படுத்துவது குறித்தும் இருதலைவர்களும் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது மதிமுகவுக்கு ஏற்பட்ட பிரச்சினையின்போது தனக்குஅனைத்து வகையிலும் ஆதரவாக இருந்ததற்காக ஜெயலலிதாவுக்கு, வைகோ நன்றிதெரிவித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications