நல்ல சக்திகள் ஒன்று திரள வேண்டும்: கலாம்

Subscribe to Oneindia Tamil

மும்பை:மனதில் தீய சக்திகள் ஒன்று சேரும் போது அவற்றை அழிக்க நல்ல சக்திகள் ஒன்றுதிரள வேண்டும். அப்போதுதான் தீவிரவாதத்தை வேரறுக்க முடியும் என்று குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

யாஹூ இணைய தளத்தின் யாஹூ இந்தியா ஆன்ஸர்ஸ்-ஆஸ்க் தி பிளானட் பிரிவுதொடங்கி வைக்கப்பட்டது. அதில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முதல்கேள்வியைக் கேட்டிருந்தார்.

தீவிரவாதத்தின் பிடியிலிருந்து பூமியை விடுவிப்பது எப்படி என்ற கேள்வியைஅப்துல் கலாம் கேட்டிருந்தார்.

இந்தக் கேள்விக்கு பல்வேறு துறைகளில் புகழ் பெற்றவர்கள் தங்களது பதிலைத்தெரிவித்திருந்தனர். இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியும், மக்சேசேவிருது பெற்றவருமான கிரண் பேடி பதிலளிக்கையில்,

தீவிரவாதிகளின் மனதில் தீவிரவாத எண்ணம் முழுமையாகஆக்கிரமித்திருப்பதால்தான் அவர்கள் ஆயுதம் ஏந்த முடிவு செய்கிறார்கள். தீவிரவாதஎண்ணத்திலிருந்து அவர்களை விடுவித்தால் தானாகவே ஆயுதங்களை அவர்கள் கீழேபோட்டு விடுவார்கள்.

இதற்கு முதலில் அவர்களது மனதை பக்குவப்படுத்த வேண்டும். முதலில்வன்முறைதான் மனதில் புகுகிறது. அதன் பிறகுதான் அது தீவிரவாதியாக மனிதர்களைமாற்றுகிறது.

தீவிரவாத எண்ணத்திலிருந்து மனதை விடுவிப்பதே நமது முதல் கடமையாக இருக்கவேண்டும். அதற்கு அரசியல் ரீதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நாம் முயற்சிக்கவேண்டும் என்றார்.

ஆர்ட் ஆப் லிவிங் அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளகருத்தில், ஆண்கள் மற்றும் பெண்களின் மனதில் தோன்றும் அமைதியின்மை,பதட்டம் ஆகியவையே அவர்களை தீவிரவாத எண்ணங்களுக்கு இட்டுச் செல்கின்றன.

குறுகிய கொள்கைகளும், குறுகிய மனப்பான்மையும் கூட இதற்கு இன்னொருமுக்கியக் காரணம். அனைத்து மதத்தினர், கலாச்சாரம், பின்னணியுடன் அணுசரித்துபழகும் தன்மை இல்லாததும் இன்னொரு காரணம்.

இதற்கு ஒரே தீர்வு, நாம் அனைவரும் மனித குலத்தின் ஒரு அங்கம் என்ற எண்ணம்வர வேண்டும் என்று கூறியுள்ளார் ரவிசங்கர்.

பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் கூறுகையில், மதவெறிதான்தீவிரவாதத்திற்கு முக்கியக் காரணம். அனைத்து மத்தினரையும் அரவணைத்துச்செல்லும் மனப் பக்குவம் நமக்கு வர வேண்டும். ஜாதி வெறி, மத வெறி அழியவேண்டும். அப்போதுதான் தீவிரவாதம் குறையும்.

அமைதியும், அன்பும் அனைவருக்கும் பரவச் செய்ய வேண்டும். அனைவரும்சமமானவர்கள்தான் என்ற எண்ணம் வந்தால் தீவிரவாதத்தை அடியோடு அழிக்கமுடியும் என்றார் பயஸ்

இறுதியில் தனது கேள்விக்கு தானே கலாம் அளித்த பதிலில், தீய சக்திகள் மனதில்புகுந்து ஆக்கிரமிக்கும்போது அதை எதிர்த்து நல்ல சக்திகள் ஒன்று திரள வேண்டும்.அப்போதுதான் தீவிரவாதத்தை அழிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+