வைகோ மதிமுக ஒரு அமாவாசை: எல்.ஜி
தஞ்சாவூர்:மதிமுகவின் இப்போதைய குழப்பமான நிலைக்கும், கட்சியின் அவல நிலைக்கும்வைகோதான் காரணம் என எல்.கணேசன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி, உடைக்கமுதல்வர் கருணாநிதி முயற்சிப்பதாக வைகோ தொடர்ந்து கூறி வருவதில்உண்மையில்லை. உண்மையில், மதிமகவின் இப்போதைய நிலைக்கு வைகோதான்காரணம்.
மதிமுக ஒரு மூழ்கும் கப்பல். அதை உணர்ந்தவர்கள் வெளியேறி வருகின்றனர்.அவர்களைக் காப்பாற்ற உயிர் காக்கும் படகு கை கொடுக்கும்போது ஏற்பதில் என்னதவறு?
திமுக என்ற கப்பலை, அரசியல் கடலில் மிகுந்த திறமையாக, கடுமையாக போராடி,அருமையாக இயக்கி வருகிறார் கருணாநிதி. கடலில் மூழ்கித் தவித்த எங்களைக் காக்ககை கொடுக்கிறார்.
எனவே கருணாநிதியை குறை கூறுவதை விட்டு விட்டு தொண்டர்களைக் காத்துக்கொள்ள வைகோ முயல வேண்டும்.
அரசியல் வானில் ஒரு காலத்தில் முழு நிலவாக ஜொலித்தது மதிமுக. ஆனால் போகப்போக அது தேய ஆரம்பித்து இன்று அமாவாசையாக மாறி விட்டது. மதிமுகவின்இன்றைய சோக நிலைக்கு வைகோவைத் தவிர வேறு யாரும் காரணமல்ல.
எங்கள் தலை மீது தொங்கியுள்ள கட்சித் தாவல் தடைச் சட்ட அபாயம் தொடரவிரும்புகிறார் வைகோ. அதனால்தான் எங்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர்பொறுப்பிலிருந்து அவர் நீக்காமல் உள்ளார் என்று கூறியுள்ளார் எல்.கணேசன்.












Click it and Unblock the Notifications